For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை வன்முறை-ராஜ்யசபாவில் திமுக-அதிமுக மோதல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ராஜ்யசபாவில் அதிமுகவும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தல் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுகவினர் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் பத்திரிக்கை அலுவகத்தை தாக்கியது குறித்து கேள்வி எழுப்பி அது குறித்து விவாதிக்க வேண்டும், திமுக அரசை கலைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் டிஆர் பாலுவும் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.

இந்த அமளியால் ராஜ்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து ராஜ்யசபா 2 மணிக்கு தொடங்கியதும் அதிமுகவினர் அதே கோரிக்கையை முன் வைத்து குரல் எழுப்பினர். இதற்கு திமுகவினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் அமளி நிலவியதால் ராஜ்யசபா மேலும் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X