பி.இ விண்ணப்பகள் வினியோகம் ஆரம்பம்
சென்னை:பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரி, கோவையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை முதலே மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பம் வாங்க குவிந்திருந்த நிலையில் வெறும் 2 கவுண்டர்களில் மட்டுமே விண்ணப்பங்கள் தரப்படுகின்றன.
இதனால் கடும் வெயிலில் மாணவ, மாணவியர், பெற்றோர் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலை 9ம் தேதி கவுன்சிலிங் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். ஆகஸ்ட் 20ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications