கர்நாடகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை களையகருணாநிதி முயல வேண்டும்-குமாரசாமி
பெங்களுரூ:காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நான் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கிறேன். அதேபோல கர்நாடகாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்வு காண முன் வர வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு கர்நாடகத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காண அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் தமிழக முதல்வர் கருணாநிதி மிகவும் அனுபவமிக்கவர். தமிழக சட்டசபையில் தொடர்ந்து 50 ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றியதற்காக பொன்விழாவையும் கொண்டாடியுள்ளார்.
காவரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக உள்ளது என அவர் கருத்து தெரிவித்து இருப்பது வியப்பை அளிக்கிறது.
கருணாநிதி கூறுவதைப் போல காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நான் தலையீட்டு தீர்வு காண உதவ தயாராக இருக்கிறேன். கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருணாநிதி தலையிட்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
அவர் தலைமையில் மேற்கொள்ளும் இத்தீர்வு முயற்சிக்கு நான் அனைத்து வகையிலும் உதவ தயாராக இருக்கிறேன். காவிரி பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை திரையிடக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். இது சட்டப்படி தவறு.
இருப்பினும் கோரிக்கையை தடுக்க முயற்சித்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் எந்த கருத்தையும் சொல்ல நான் விரும்பவில்லை என அவர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications