லாவோசில் நிலநடுக்கம்-தாய்லாந்த், வியட்நாமில்அதிர்ந்த கட்டடங்கள்
Subscribe to Oneindia Tamil
பாங்காக்:லாவோஸ் நாட்டில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 என்ற அளவுக்குப் பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 750 கி.மீ. தொலைவில் உள்ள தாய்லாந்து நாட்டில் பல கட்டடங்கள் அதிர்ந்தன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மிக உயரமான கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அவற்றிலிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அதே போல இந்த நிலநடுக்கத்தை வியட்நாம் தலைநகர் ஹனோயிலும் சீனாவின் சில பகுதிகளிலும் உணர முடிந்தது. இங்கும் பல கட்டடங்கள் அதிர்ந்தன.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.26 மணிக்கு லாவோஸை நிலநடுக்கம் தாக்கியது. மக்கள் நெருக்கம் மிகக் குறைவான மலைப் பகுதியில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் லாவோசில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications