சொந்த முடிவெடுக்க முடியாத பிரதமர்: பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:காங்கிரஸ் தலைவியின் நிழலாக செயல்படும் பிரதமர் மன்மோகன் சிங், சொந்த முடிவெடுக்க முடியாதவராக உள்ளார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக துணைத் தலைவர் மல்ஹோத்ரா கூறுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் நிழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடை செயல்பாடுகள் சரியில்லை.
மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக இருக்கிறார். இந்தியாவில் இதுவரை இவரைப் போல் பிரதமர்கள் யாருமில்லை.
அவரால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை. அவர் ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது.
இதுபோல் எந்த பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications