தமிழில் ஐஏஎஸ் தேர்வெழுதி வென்ற கோபி மாணவர்
கோபிசெட்டியபாளையம்:கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த தேவசேனாதிபதி தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வு எழுதி வென்றுள்ளார்.
கம்ப்யூட்டர் பொறியியல் படித்த தேவசேனாதிபதி சென்னையிலுள்ள அரசு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார்.
2005ம் ஆண்டு பிரதான தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், டெல்லியில் நடந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனது.
இதையடுத்து புவியியல் மற்றும் தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து, தமிழிலேயே மீண்டும் ஐஏஎஸ் தேர்வை எழுதினார்.
இந்திய அளவில் 108வது ரேங்க்கும் தமிழகத்தில் 6வது ரேங்கும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சேனாதிபதி கூறுகையில்,
தமிழ் மீது இருந்த ஆர்வம் காரணமாக தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றாலும், கருத்துகளை தெளிவாக கூற தாய்மொழி சிறந்ததாக இருந்தது. இதனால் இந்த முறை தேர்வில் வெற்றி பெற முடிந்தது என்றார்.












Click it and Unblock the Notifications