தினகரன் தாக்குதல்-சிபிஐ தொடர்ந்து விசாரணை
மதுரை: மதுரை வன்முறை சம்பவம் தொடர்பாக 2 நாளாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதுரையில் தினகரன் நாளிதழ் சன் டிவி அலுவலகங்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரித்து வருகிறது.
மதுரை நத்தம் சாலையிலுள்ள விருந்தினர் மாளிகையில் சிபிஐ எஸ்.பி. போஸ், டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் அருளானந்தம் உள்ளிட்டோர் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ள இந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தையும் நேரில் ஆய்வு செய்தனர்.
தினகரன் நிறுவன மேலாளர், செய்தி ஆசிரியர், செய்தியாளர்கள், வீடியோ பதிவு செய்தோர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.
கணினி பிரிவு ஊழியர்களை 4 குழுக்களாக பிரித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வன்முறை சம்பவத்தை நேரில் பார்த்த சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தின்போது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஊழியர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications