ஜனாதிபதி தேர்தல்-ஷெகாவத்தை நிறுத்த பாஜக திட்டம்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் வரும் ஜூன் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
பாஜக சார்பில் வாஜ்பாயை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த அத்வானி கோஷ்டி திட்டமிட்டது. ஆனால், அதை நிராகரித்துவிட்டார் வாஜ்பாய்.
இந் நிலையில் பாஜக தலைமையினான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துவிட்டதால் ஜனாதிபதி தேர்வு ஒருமனதான இல்லாமல் போட்டி ஏற்படுவது நிச்சயமாகிவிட்டது.
ஆனால், பாஜக கூட்டணியை விட அதிக பலத்துடன் காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் காங்கிரஸ் நிறுத்தும் நபரே வெல்வார்.