உ.பியில் தொடர் குண்டுவெடிப்பு - பதட்டம்
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் நேற்று இரவு அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
20 நிமிட இடைவெளியில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்தன. முதல் குண்டுவெடிப்பு ஜல்கல் கட்டடத்திலும், 2வது குண்டுவெடிப்பு பால்தியோ பிளாசாவிலும், 3வது குண்டு கணேஷ் செளரஹா என்ற இடத்திலும் வெடித்தன.
டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் பயன்படுத்தும் சிறிய சைக்கிள்களில் மாட்டப்பட்டிருந்த பேக்குகளில் இந்த டிபன் பாக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன
இவை, அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் கிடையாது என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து உ.பி. முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோரக்பூரில் பதட்டம் பரவியது. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications