திருவள்ளூர்: வேன்-லாரி மோதலில் 4 பேர் பலி
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். சீனிவாசனுக்கு நைஜீரியாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து நைஜீரியா செல்வதற்காக தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு தனது குடும்பத்துடன் வேன் ஒன்றில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
வேன், திருவள்ளூர் அருகே தச்சூர் என்ற இடத்தில் ஜிஎன்டி சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது வேனுக்கு முன்பு ஒரு லாரி போய்க் கொண்டிருந்தது. அந்த லாரியை வணிக வரித் துறை அதிகாரிகள் சோதனைக்காக குறுக்கே புகுந்து நிறுத்துமாறு உத்தரவிட்னர். இதனால் நிலை குலைந்த லாரி டிரைவர் வேகமாக பிரேக் போட்டார்.
அப்போது பின்னால் வந்த வேன், லாரி மீது வேகமாக மோதியது. இதில் சீனிவாசன், அவரது தாயார் நீலம்மாள் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications