வாரிசைத் தேர்ந்தெடுக்க மன்னர் ஆட்சியாநடக்கிறது? கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்
சென்னை:கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்று கேட்க இங்கு என்ன மன்னராட்சியா நடக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா காட்டமாக கூறியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள வானகரத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன், கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியனின் மகள் பாரதி ஆகியோர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 6 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 6 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் ஜெயலலிதா பேசுகையில்,
நல்ல தலைவர் என்பவர் தொண்டர்களுக்கு வழி காட்டியாகவும், தாய்ப்பாசத்துடனும் இருந்து கட்சியை நடத்திச் செல்ல வேண்டும்.
ஆனால் இன்று சிலர் நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல், நாற்காலியை பற்றி மட்டுமே கவலைப்படும் குடும்ப அரசியல் தலைவர்களாக உள்ளனர். தமிழ்நாட்டை சீர்குலைத்து, சின்னாபின்னமாக்கி, சட்டம் ஒழுங்கை சீரழித்து வருகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் முதல்வரே சட்டம் ஒழுங்கு சீரழிய காரணமாக வேதனை அளிக்கக் கூடியது. இதை எண்ணி ஒவ்வொரு நாளும் அவருக்காக ஓட்டு போட்ட மக்கள் வெட்கித் தலை குணிகிறார்கள்.
மதுரை வன்முறையில், 3 அப்பாவிகள் இறந்ததால், அவர்களின் குடும்பத்தினர் என்ன துயரப்பட்டிருப்பார்கள், எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்புக்கு என்ன அவசியம். வாரிசைத் தேர்ந்தெடுக்க இவர்கள் முகாலாய சாம்ராஜ்யத்தையா நடத்துகிறார்கள் அல்லது இவர்கள் என்ன இங்கிலாந்து மன்னர்களா. இப்போது மக்களாட்சி நடந்து வருவது இவர்களுக்குத் தெரியவில்லை.
ஒருவன், தனது தந்தையைக் கொன்று விட்டு நான் அனாதை ஆனேன் என்று கூறினானாம். அந்தக் கதையாக இது இருக்கிறது. தன் வினை தன்னைச் சுடும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கருணாநிதியை, தீய சக்தி என்றார் எம்.ஜி.ஆர். அந்த தீய சக்தி நடத்தும் ஆட்சியை, மக்கள் விரோத ஆட்சியை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். இனி திமுகவுக்கும், கருணாநிதிக்கும் எதிர்காலம் இல்லை. அவர்களுக்கு இனி இலையுதிர்காலம்தான். நமக்குத்தான் வசந்த காலம் காத்திருக்கிறது என்றார் ஜெயலலிதா.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications