ஜூன் 4ம் முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:ஜூன் 14ல் மார்க் சீட்
சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டனது. இதையடுத்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஜூன் 14ம் தேதி வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
மாணவர்களின் மதிப்பெண் பட்டியில் அனைத்து பள்ளிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர இணையத் தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியில்கள் வரும் ஜூன் 14ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் அந்ததப் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டல்:
மாணவர்கள் தங்களது பாடங்களின் மறு கூட்டலுக்கு வரும் ஜூன் மாதம் 4ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மறு கூட்டலலுக்கான விண்ணப்பங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய அரசுத் தேர்வுகள் மணடல அலுவலகங்களில் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை கிடைக்கும்.
இதற்கான கட்டணங்கள், ஒரு தாள் கொண்ட பாடத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ரூ.205 மற்றும் இருதாள் கொண்ட பாடத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ரூ.305 ஆகும்.
மார்ச் 2007 தேர்வு எழுதியவர்கள் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூன், ஜூலையில் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களை ஒப்படைக்க வேண்டும்.
மார்ச் மாதத்திற்கு முன் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும்.
எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 4ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், ஓஎஸ்எல்சி தேர்வு ஜூலை 3ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்திய தேர்வுகள் ஜூலை 2ம் தேதி முதல் 12ம் தேதி வரையும் நடைபெறும் என்றார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications