புதுச்சேரியில் புதுமை: பிளஸ் 1 விடைத்தாள்திருத்தாமலேயே அனைவரும் பாஸ்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:புதுச்சேரியில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பிளஸ் ஒன் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படாமலேயே அனைவரும் பாஸ் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ராகேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006-07ம் கல்வியாண்டில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பிளஸ் ஒன் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும், பிளஸ்2 வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது என்றார்.
புதுச்சேரியில் ஆசிரியர்கள் ஸ்டிரைக் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களின் பிளஸ் ஒன் விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் நாள் நெருங்கி விட்டதால், விடைத்தாள்களைத் திருத்தாமலேயே அனைவரும் பாஸ் ஆகி விட்டதாக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications