புலிகள் - ராணுவம் கடும் மோதல்ஒரே நாளில் 90 பேர் பலி
கொழும்பு:இலங்கையில் நேற்று நடந்த பயங்கர சண்டையில், 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும், 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் நிலைமை மேலும் பதட்டமடைந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடந்த 2 நாட்களாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் நேற்று உச்சமடைந்தது.
வவுனியா மாவட்டத்தில் ராணுவ முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். அங்கிருந்த ராணுவ வீரர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமான கவச வாகனங்களையும், ஆயுதங்ளையும் புலிகள் கைப்பற்றினர்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 52 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை உறுதி செய்ய முடியவில்லை.
தற்போது அந்தப் பகுதி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 90 பேர் வரை கொல்லப்பட்டதால் இலங்கையில் போர்ப் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications