கோவை குண்டுவெடிப்பு கைதிக்குக் கல்யாணம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டுவெடிப்பு கைதிக்கு திருமணம் நடந்தது. பரோலில் வந்து திருமணம் செய்து கொண்ட அவர் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர். இவர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கும் பாலக்காட்டைச் சேர்ந்த ஜெய்புன்னிசாவுக்கும் திருமணம் முடிவானது. இதையடுத்து நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சுபேருக்கு பரோல் அளிக்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுபேர் உக்கடத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கோண்டு வரப்பட்டார். பின்னர் திருமணம் நடந்தது. அதன் பின்னர் மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுபேர்.












Click it and Unblock the Notifications