10ம் வகுப்பில் முதலிடம்: மாணவர்களுக்கு அரசு பரிசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:பத்தாவது வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் கருணாநிதி இன்று ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
சமீபத்தில் வெளியான பத்தாவது வகுப்பு தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி பரிசு வழங்கிப் பாராட்டினார்.
முதலிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி அட்சயாவுக்கு ரூ. 7500 பரிசாக வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த ஜெசீமா சுலேகா, சிவகாம சுந்தரி ஆகியோருக்கு தலா ரூ. 6000ம் பரிசும், 3வது இடம் பிடித்த நான்கு பேருக்கு தலா ரூ. 5000 பரிசும் வழங்கப்பட்டது.
இவர்களின் உயர் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications