For Daily Alerts
Just In
சென்னை: ஒரே நாளில் 500 ரவுடிகள் கைது
சென்னை:சென்னை நகரில் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையி்ல் ஒரே நாளில் 500 ரவுடிகள் சிக்கினர்.
சென்னை நகரில் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.இதையடுத்து சென்னை நகரில் ரவுடிகள் நடமாட்டத்தை ஒழிக்கவும், பழைய குற்றவாளிகளைப் பிடிக்கவும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த வேட்டையில், 386 ரவுடிகள், 67 பழைய குற்றவாளிகள்,12 நீண்ட கால கிரிமினல்கள் சிக்கினர்.
கைது வாரண்ட் நிலுவையில் உள்ள 38 பேரும் இந்த வேட்டையின்போது சிக்கினர். ரவுடிகள் வேட்டை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.
Comments
Story first published: Sunday, June 10, 2007, 5:30 [IST]