சிறையில் அதிமுக பிரமுகர் மரணம்கருணாநிதியே காரணம்-ஜெ.
சேலம்: சேலம் மத்திய சிறையில் அதிமுக பிரமுகர் சுகுமார் இறந்ததற்கு முதல்வர் கருணாநிதியை பொறுப்பு, இதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த 7ம் தேதி நடந்த போராட்டத்தின்பாது கைது செய்யப்பட்ட அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பிரமுகர் சுகுமார் சிறையில் மாரடைப்பால் இற்நதார்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா இன்று காலை சேலம் வந்தார். நேராக சுகுமார் இல்லத்திற்கு சென்று அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுகுமார் இறந்ததற்கு கருணாநிதி பதில் சொல்லி தீரவேண்டும். கைது செய்யப்பட்ட அதிமுகவினருக்கு சிறையில் உணவு, குடிநீர் வழங்கவில்லை. இது காட்டுமிராண்டித்தனமான செயல். மிகவும் கண்டித்தக்கது என்றார் ஜெயலலிதா.