கேரளாவை உலுக்கும் சிக்குன்குனியாகளம் இறங்கிய ராணுவம், கடற்படை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:கேரளாவில் படு வேகமாக பரவி வரும் சிக்குன்குனியா காய்ச்சலைக் கட்டு்ப்படுத்தும் பணியில் ராணுவமும், கடற்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் சிக்குன்குனியா படு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டுள்ளனர். சிக்குன்குனியாவைக் கட்டு்ப்படுத்த கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

சிக்குன்குனியா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையில் ராணுவம் மறறும் கடற்படையின் உதவியை கேரள அரசு நாடியுளளது. இதையடுத்து ராணுவம் மற்று் கடற்படையிலிருந்து டாக்டர்கள் குழு கேரள அரசுக்கு உதவியாக களம் இறங்கியுள்ளது.

பங்கோடு ராணுவ முகாமிலிருந்து 2 குழுக்கள் பத்தனம்திட்டா, அம்பூரி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் உள்ளனர். இதேபோல கோட்டயம்,இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு கடற்படை குழுக்கள் சென்றுள்ளன.

இதுதவிர மும்பையிலிருந்து மருந்துப் பொருட்களுடன் விமானப்படை விமானம் ஒன்றும் கேரளாவுக்கு விரைகிறது.

இதேபோல,சென்னையிலிருந்து ராணுவ டாக்டர் குழு ஒன்றும் கேரளாவுக்கு செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+