குமரி மாவட்டத்திலும் பரவியது சிக்குன்குனியா

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:கேரளாவை ஆட்டிப் படைத்து வரும் சிக்குன்குனியா காய்ச்சல் கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டப் பகுதிகளிலும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக சிக்குன்குனியா காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. சிக்குன்குனியாவுக்கு இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.

சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இதனால் ராணுவமும், கடற்படையும் அங்கு களத்தில் குதித்துள்ளன. சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பரவி வரும் சிக்குன்குனியா தமிழகத்திற்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைபவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது. தடுப்பு மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்ட கிராமங்களில் சிக்குன்குனியா பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுள்ளனர்.

இதனால் குமரி மாவட்ட மக்களிடையே சிக்குன்குனியா பீதி பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+