டெல்லியை உருக்கிய வெயில்112 டிகிரியால் மக்கள் தவிப்பு
டெல்லி:தலைநகரம் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 112 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
வட மாநிலங்களில் வெயில் இன்னும் குறைந்தபாடில்லை. வெப்பக் காற்றுடன் கூடிய கடும் வெயில் அடித்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து அடித்து வரும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பல வட மாநில நகரங்களில் நேற்று கடும் வெயில் அடித்தது. தலைநகர் டெல்லியில் வெயிலின் அளவு 112 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இதனால் தலைநகர மக்கள் தலை காய்ந்து அவதிக்குள்ளாகினர்.
நேற்று விடுமுறை நாள் என்றாலும் கூட கடும் வெயில் காரணமாக மக்கள் நடமாட்டத்தைக் காண முடியவில்லை. அப்படியே மீறி வெளியே வந்தவர்களும் கூட குளிர்பானங்களைக் குடித்தபடியும், நிழலில் தஞ்சமடைந்தும் காணப்பட்டனர்.
இன்னும் 2 நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என்றும் பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications