நாகர்கோவில்-ஹெளரா ரயில்தடம் புரண்டு 3 பேர் பலி
விசாகப்பட்டனம்:நாகர்கோவிலில் இருந்து ஹெளரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனம் அருகே தடம் புரண்டதில் 3 பயணிகள் இறந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹெளராவுக்கு குருதேவ் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. ரயில்,விசாகப்பட்டனம் அருகே துவ்வடா என்ற இடத்தில் நேற்று நள்ளிரவில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
![]() |
மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் வீரேந்திரா (61), பிரசாத் (51),சையன் (35) ஆகிய 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த 3 பேரும் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்கள் விசாகப்பட்டனத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே மருத்துவமனையிலும் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக இப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை-ஹெளரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அனகாபள்ளியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்-ஹெளரா பலக்நாமா எக்ஸ்பிரஸ்,ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எளமங்கலி நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications