திமுகவினரை வெளியேற்ற தேர்தல்ஆணையத்துக்கு அதிமுக தந்தி
மதுரை:மதுரை மேற்கு தொகுதியில் தங்கியிருக்கும், தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத திமுகவினரை உடனடியாக வெளியேற்றுமாறு கோரி தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தந்தி அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் மனோஜ் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் திவாகர் ஆகியோர் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள தந்தியில் கூறியுள்ளதாவது:
மதுரை மேற்கு தொகுதியைச் சாராத ஏராளமான திமுகவினர் தொகுதியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அவர்களை வெளியேற்ற போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
திருமண மண்டபம், கட்சி நிர்வாகிகளின் வீடுகள் ஆகியவற்றில் காவல்துறையினரின் முழுப் பாதுகாப்புடன் திமுகவினர் தங்கியுள்ளனர்.
அதனால் போலீஸார் சோதனை நடத்தி அவர்களை வெளியேற்றி தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற வகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications