ஜெராக்ஸ் காப்பியை வைத்து ரூ.10 லட்சம்கடன் கொடுத்த பலே வங்கி மேலாளர்
சென்னை:வீட்டுப் பத்திரத்தின் ஜெராக்ஸ் காப்பியை வைத்து பல லட்சம் கடன் கொடுத்து ரூ. 10 லட்சம் அளவுக்கு மோசடி செய்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆதம்பாக்கம் வானுவம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கு போரூர் பகுதியில் ஒரு ஃபிளாட் வீடு உள்ளது.
இந்த நிலையில் போரூர் ஃபிளாட்டின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ. 10 லட்சமும், மயிலாப்பூர் கார்ப்பரேஷன் வங்கியில் ரூ. 10 லட்சமும் கடன் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் பாலசுப்ரமணியத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது போரூர் வீட்டின் வீட்டுப் பத்திரத்தின் நகலை கார்ப்பரேஷன் வங்கியில் கொடுத்து கடன் வாங்கிய விவகாரம் தெரிய வந்தது.
இந்த மோசடிக்கு கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் ஸ்ரீதரனும் உடந்தை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications