ரூ2000 கோடியில் சென்னை-திருப்பதி 4 வழிச்சாலை
சென்னை:சென்னை-திருப்பதி சாலை .2,000 கோடி செலவில் 4 வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் பாதை வேலூர் வரை மட்டுமே நெடுஞ்சாலையாக உள்ளது. அதையடுத்து மிகக் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதை 4 வழிச் சாலையாக விரிவாக்குமாறு மத்திய அரசிடம் ஆந்திரம் நீண்ட காலமாக கோரி வந்தது. இந் நிலையில் 4 வழிப் பாதை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
திருப்பதி ராமானுஜர் சந்திப்பிலிருந்து சென்னை வரையிலான 147 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்க திட்டமிட்டு, அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சாலை தமிழகத்தில் 81 கி.மீ தொலைவும், ஆந்திராவில் 66 கி.மீ தொலைவிலும் அமைக்கப்படவுள்ளது. கிலோமீட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 கோடி செலவிடப்படவுள்ளது. மொத்தம் ரூ.2,000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications