ஓட்டல் ஊழியர்கள் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி
சென்னைஓட்டல் ஊழியர்கள் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியானார்.
சென்னை சூளைமேடு விநாயகபுரத்தில், கேரளாவைச் சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் அரும்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மாலை ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக நடந்து வந்துள்ளனர். அங்கிருந்த டிரைவரிடம் பான் பராக் வாங்கி வருமாறு சொல்லியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் சண்டை மூண்டது.
இதை அறிந்த மற்ற ஒட்டல் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவே மீண்டும் ஆட்டோ டிரைவர்களிடம் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆட்டோ டிரைவர்கள் சஞ்சீவி மற்றும் ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் இருவரையும் மற்ற டிரைவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சஞ்சீவி இறந்து விட்டார். ராதாகிருஷ்ணன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக ஓட்டல் மேனேஜர் நஜித் உட்பட 9 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications