குற்றால அருவியில் மூச்சு திணறி வாலிபர் மரணம்
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்:குற்றால அருவியில் குளித்த வாலிபர் தண்ணீர் அழுதத்தால் மூச்சு திணறி மரணமடைந்தார்.
குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் ஏராமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(28) தன் நண்பர்கள் 12 பேருடன் குற்றாலத்துக்கு வந்தார். மெயின் அருவியில் அவர்கள் குளித்தனர். சற்று நேரத்தில் வெங்கடேசன் திடீரென அப்படியே அமர்ந்துவிட்டார்.
உடனிருந்த நண்பர்கள் அவர் உட்கார்ந்து கொண்டு குளிக்கிறார் என நினைத்தனர். ஆனால், வெங்கடேசன் அருவியின் நீர் அழுத்தத்தால் மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.












Click it and Unblock the Notifications