சென்னையிலிருந்து கிளம்பியது நிமிட்ஸ்
சென்னை: சென்னையில் ஐந்து நாட்களாக முகாமிட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், இன்று தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றது.
அமெரிக்காவின் பிரமாண்ட அணு சக்தி போர்க் கப்பலான நிமிட்ஸ் கடந்த 2ம் தேதி சென்னைக்கு வந்தது. நிமிட்ஸ் கப்பல் சென்னைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் 2ம் தேதி சென்னைக்கு வந்த நிமிட்ஸ், துறைமுகத்திற்கு மூன்று கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டது. இந்தக் கப்பலில் வந்திருந்த வீரர், வீராங்கனைகள் சென்னை நகரில் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்தனர். மகாபலிபுரத்திற்கும் சென்றனர்.
இவர்களின் வசதிக்காக துணை நடிகைகள், மாடல் அழகிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஸ்டார் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நிமிட்ஸ், இன்று காலை கிளம்பிச் சென்றது.
இந்திய பயணம் மிகவும் இனிமையானதாக அமைந்ததாகவும், மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் வீரர், வீராங்கனைகள் குறிப்பிட்டனர்.
நிமிட்ஸ் கப்பலை இந்திய கடற்படையினர் இந்திய கடற்படை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். பின்னர் வளைகுடா நோக்கி நிமிட்ஸ் தனது பயணத்தைத் தொடங்கியது.
வளைகுடா நாடுளில் நிமிட்ஸ் சில நாட்கள் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications