அமெரிக்கா-வீடுகளுக்குள் விமானம் புகுந்து 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஆர்லாண்டோ: அமெரிக்காவில் சிறிய விமானம் தீப்பற்றிய நிலையில் அவசரமாக தரையிறங்கியபோது வீடுகளுக்குள் புகுந்தது. இதில் விமானி மற்றும் வீட்டிலிருந்தோர் 5 பேர் பலியானார்கள்.

இரட்டை என்ஜின்களை கொண்ட செஸ்னா-310 ரக விமானம், டேய்டனோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புளோரிடா மாகாணத்தில் உள்ள லேக்லேண்ட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

plane crashes into Florida homes


ஆல்லாண்டோ மீது பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் தீப் பிடித்தது. இதையடுத்து விமானத்தை அவரசரமாக தரையிறக்க விமானி முயன்றார். அப்போது சேன்போர்டு குடியிருப்புகள் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் விமானம் புகுந்தது.

இதையடுத்து விமானம் வெடித்துச் சிதறி வீடுகளில் தீப் பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் விமானி உள்பட விமானத்திலிருந்த இருவர் பலியானார்கள். மேலும் வீடுகளில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் இறந்தனர்.

மேலும் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் காணப்பட்ட ஒரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். அவனுடைய பெற்றோரும் தீக்காயம் அடைந்துள்ளனர். அவனுடைய தங்கையான 4 வயது சிறுமியைக் காணவில்லை.

குடியிருப்பு பகுதியிலிருந்து இந்த இரு வீடுகளும் கொஞ்சம் தள்ளி இருந்தன. அருகே உள்ள புல் வெளியில் விமானத்தை தரையிறக்க விமானி முயன்றபோது அது இந்த வீடுகளுக்குள் புகுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+