பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:மத்திய அரசை கண்டித்து இன்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது, 4.5 கோடி செல்போன் இணைப்பு கொடுக்க தேவையான ஜிஎஸ்எம் கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ராசா அதை நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த டெண்டரை அனுமதித்தால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என ராஜா விளக்கியுள்ளார்.
இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்க ராஜா திட்டமிடுகிறார் என்று கூறி இன்று நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜி.எஸ்.எம். கருவிகளை வாங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications