சென்னை திரும்பினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:பெங்களூர் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.
முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாளுடன் பெங்களூர் சென்றிருந்தார். அங்கு மகள் செல்வி வீட்டில் கடந்த 3 நாட்களாக ஓய்வெடுத்து வந்தார். மேலும் செல்வி புதிதாக வாங்கியுள்ள பண்ணை வீட்டையும் திறந்து வைத்து அதிலும் கருணாநிதி ஓய்வெடுத்தார்.
அவருடன் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் பெங்களூர் சென்றிருந்தார்.
மூன்று நாள் ஓய்வுக்குப் பின்னர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார் கருணாநிதி.
செல்வியின் கணவர் முரசொலி செல்வம் தான் கர்நாடகத்தில் சன் டிவியின் உதயா டிவியை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முரசொலி மாறனின் சகோதரர் ஆவார்.












Click it and Unblock the Notifications