ஜெயலலிதாவுடன் ஜஸ்வந்த் சிங் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்று சென்னை வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுக இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆனால் தங்களது ஆதரவுடன் போட்டியிடும் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி 3வது அணியைக் கோரி வருகிறது.

இந் ˆயில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் இன்று சென்னை வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஷெகாவத்துக்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் என்று அவர் கோரவுள்ளார். பாஜகவின் சார்பில் ஜஸ்வந்த் சிங் வரவில்லை என்றும், ராஜஸ்தான் மாநிலத்தைச் ேசர்ந்தவர் என்ற முறையில், ஷெகாவத் சார்பில் ஜெயலலிதாவுடன் பேச அவர் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னைக்கு வந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைச் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால் ஜெயலலிதாவை அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+