நக்சல் சுந்தரமூர்த்தியை விடுவிக்கக் கோரி வழக்கு
சென்னை:நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தியை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிபாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெரியகுளம் வனப் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 நக்சலைட்டுகள் திருப்பூரில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த சுந்தரமூர்த்தி பிடிபட்டதன் மூலம் நக்சலைட்டுகளின் தென் மாவட்ட செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்பை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிபாபு என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் சுந்தரமூர்த்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்டவிரோத போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். அவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகலுக்கு மேல் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications