2 லாரிகள் மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:மணல் ஏற்றி வந்த லாரியும், சரக்கு ஏற்றி வந்த லாரியும் இன்று அதிகாலை நாமக்கல் அருகே நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
![]() |
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கிச் சென்றது. இன்று அதிகாலை இந்த லாரி நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தது.
அப்போது திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றும், மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. உடனடியாக இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.
இந்தக் கோர விபத்தில் இரு லாரிகளின் டிரைவர்களும், மணல் லாரியில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். மணல் லாரியில் பயணித்த மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications