ஜனாதிபதி தேர்தலில் புது நெறிமுறைகள்!
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு புதிய நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வருகிற 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லி மற்றும் மாநிலத் தலைநகரங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக சில நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவற்றை தேர்தல் அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாக்குப் பதிவு முழுவதும் வீடியோவில் படமாக்கப்படுகிறது. வாக்கெடுப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் வீடியோ படம் எடுக்கப்படும்.
வாக்காளர்கள் (எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்) தங்களது அடையாள அட்டைகளை காட்ட வேண்டும்.
வாக்குப் பதிவு மையத்திற்குள் செல்போன்கள், கார்டுலெஸ் போன்கள், வயர்லஸ் போன்களுடன் வாக்காளர்கள் வரக் கூடாது.
தாங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு எதிரே டிக் செய்வது அல்லது அடித்தல் குறியீடு செய்வது அந்த வாக்கை செல்லாத வாக்காக்கி விடும்.
வாக்குப் பெட்டிகள், ஓட்டுச் சீட்டுக்கள் உள்ளிட் தேர்தல் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அவற்றை வாக்குப் பதிவு அறைக்கு எடுத்து வருவது போன்றவற்றை வீடியோவில் படமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications