இலங்கை- புலிகள், ராணுவம் மோதலில் 19 பேர் பலி
கொழும்பு:மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டு பகுதியை நோக்கி முன்னேற முயன்ற இலங்கை ராணுவத்தின் இருமுனை தாக்குதலை புலிகள் முறியடித்துள்ளனர்.
இத் தாக்குதலில் 16 இலங்கை ராணுவத்தினர் பலியாகிவிட்டதாகவும் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராணுவத்தினரிடமிருந்து ஆயுத தளவாடங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர். 4 வீரர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டன.
நேற்று காலை முதல் ராணுவத்தினர் வவுனியா மற்றும் மன்னாிரல் பிரமணாளங்குளத்திலிருந்து தம்பனையை இலக்கு வைத்தும், இலுப்பங்குளத்திலிருந்து முள்ளிக்குளத்தை இலக்கு வைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு துணையாக விமானப் படையினரும் தொடர்ந்து குண்டு வீசினர்.
ராணுவத்தினருக்கு எதிராக புலிகளும் எதிர் தாக்குதல் நடத்தியதில் 16 வீரர்கள் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர், இதில் 4 பேரின் சடலங்களை கைப்பற்றியுள்ளோம், ராணுவத்தின் கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்தது, ராணுவத்தினர் முன்னேற்ற முயற்சிகள் தோல்விடைந்தன, ஆர்பிஜி வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்களையும் கைப்பற்றிவிட்டோம் என புலிகள் தரப்பு தெரிவிக்கிறது.
இத் தாக்குதலில் தங்கள் தரப்பில் 3 பேர் பலியானதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications