சிப்ஸ் திண்ற மகனை கொன்ற தந்தை
கட்டாக்:
தான் சாப்பிட வாங்கி வந்த உருளைக்கிழங்கு சிப்ஸை தனது மகன் எடுத்துச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 6 வயது மகனை கொடூரமாக அடித்துக் கொன்றார்.
ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் நரசிங்கபூர் அருகே உள்ள நிமசாஹி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (28). நேற்று இவர் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வந்தார்.
வீட்டில் சிப்ஸை வைத்து விட்டு அந்தப் பக்கமாக சென்றிருந்தார் நாயக். அப்போது அவரது 6 வயது மகன் அந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டு விட்டான்.
திரும்பி வந்து பார்த்த ரமேஷ், சிப்ஸைக் காணாமல் திடுக்கிட்டார். தனது மகன்தான் எடுத்துச் சாப்பிட்டு விட்டான் என்பதை அறிந்த அவர், கோபத்தில் மகன் என்று கூட பாராமல், கட்டையை எடுத்து மகனை கொலை வெறியுடன் அடித்துள்ளார்.
அதில் அந்த அப்பாவிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். போலீஸார் விரைந்து வந்து சிப்ஸுக்காக பெற்ற மகனை அடித்துக் கொன்ற ரமேஷ் நாயக்கைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications