சிவகங்கை குண்டுவெடிப்பு: மேலும் மூவர் சரண்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவடிப்பில் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கடந்த 29ம் தேதி, சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன், கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திமுக கவுன்சிலர் மந்தக்காளை, மாவட்ட திமுக துணைச் செயலாளர் மணிமுத்து, என்ஜீனியர் பாலா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் 4 பேரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் மந்தக்காளையின் தம்பி கண்ணன், மைத்துனர் கண்ணன் மற்றும் முருகப்பாண்டி ஆகியோர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
முருகேசன் என்பவர் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications