For Daily Alerts
Just In
விழுப்புரம்: பஸ்-ஆட்டோ மோதலில் 4 பேர் பலி!
விழுப்புரம்:இன்று அதிகாலை அரசு பஸ்சும் சரக்கு ஆட்டோவும் மோதிக் கொண்டதில் 4 பேர் பலியாகினர்.
சென்னையிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சும், சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்ற மினி-டோர் ஆட்டோவும் இன்று அதிகாலை விழுப்புரத்தை அடுத்துள்ள சுந்தரம்பாளையம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் ஆட்டோவில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு பேர் பெண்கள். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இறந்தவர்களின் விபரம்:
சசிகுமார்(25), அவரின் மனைவி வண்டார்குழலி(22), சசிகுமாரின் தாய் வள்ளியம்மாள்(49) மற்றும் அவர்களின் 4வயது மகன் ராகவன்வடிவேல் ஆகியோர்.
Story first published: Thursday, May 17, 2007, 5:30 [IST]