For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம்: பஸ்-ஆட்டோ மோதலில் 4 பேர் பலி!

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:இன்று அதிகாலை அரசு பஸ்சும் சரக்கு ஆட்டோவும் மோதிக் கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

சென்னையிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சும், சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்ற மினி-டோர் ஆட்டோவும் இன்று அதிகாலை விழுப்புரத்தை அடுத்துள்ள சுந்தரம்பாளையம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் ஆட்டோவில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு பேர் பெண்கள். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இறந்தவர்களின் விபரம்:

சசிகுமார்(25), அவரின் மனைவி வண்டார்குழலி(22), சசிகுமாரின் தாய் வள்ளியம்மாள்(49) மற்றும் அவர்களின் 4வயது மகன் ராகவன்வடிவேல் ஆகியோர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X