3 1,000 புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் திறக்க திட்டம்
சென்னை:நாட்டில் புதிதாக 1000 கேந்திரி வித்யாலாயா பள்ளிகளும், 700 ஜவஹர் நவோதயா வித்யாசாலா பள்ளிகளும் திறக்கப்படும் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறைக்கான இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் மாநகராட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளி ஒன்றில் நடந்த பெருந்தலைவர் காமராஜரின் 105வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாசன் பேசுகையில், கல்வித்துறைக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ. 23,142 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 34 சதவீதம் அதிகமாகும்.
நாட்டில் உள்ள 9.5 லட்சம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 7,324 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 12 கோடி மாணவ, மாணவியர் பலனடைவர்.
அனைவருக்கும் கல்வி அளிக்கும் வகையில், புதிதாக 1,000 கேந்திரி வித்யாலாயா பள்ளிகளும், 700 ஜவஹர் நவோதயா வித்யாசாலா பள்ளிகளும் திறக்கப்படும் என்றார் வாசன்.
நிகழ்ச்சியில் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications