Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புகாரை வாங்க மறுத்த போலீஸ்பெண் ஆவேசம்-சேலையை கழற்றி ஆபாசம்!

Subscribe to Oneindia Tamil

கோவை:அலுவலகத்தில் தன்னிடம் மானபங்கம் செய்ய முயன்றவர்கள் மீது புகார் கொடுக்க வந்த பெண், அந்தப் புகாரை போலீஸார் வாங்க மறுத்ததால் ஆத்திரத்தில் சேலை, ஜாக்கெட்டை கழற்றி எறிந்ததால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வந்தார். கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த அந்தப் பெண் எம்.பி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

காவல் நிலையத்தில் இருந்தவர்களிடம், தனது அலுவலகத்தைச் சேர்ந்த சிலர், தன்னை மானபங்கம் முயன்றதாகவும், அதற்கு தான் உடன்படாததால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் புகார் கூறினார்.

ஆனால் அந்தப் புகாரை வாங்குவதில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அந்தப் பெண், யாரும் எதிர்பாராத வகையில் தனது சேலை, ஜாக்கெட்டை கழற்றி எறிந்தார்.

உள் பாவாடை மற்றும் பிராவுடன் படு ஆவேசமாக காணப்பட்டார். இதைப் பார்த்து பயந்து போன போலீஸார், பெண் போலீஸாரை விட்டு அந்தப் பெண்ணை சேலை மற்றும் ஜாக்கெட்டை அணிய வைத்தனர். பின்னர் அவரை சமாதானப்படுத்திய அவர்கள், உங்கள் கணவருடன் வந்து புகார் கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

புகார் கொடுக்க வந்த பெண்ணின் இந்த திடீர் செயலால் காவல் நிலையமே ஆடிப் போனது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+