மந்திரவாதி கொலையில் மேலும் ஒருவர் சரண்!
சென்னை:சென்னையில் மந்திரவாதி ஷேக் பரீத் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் போலீஸில் சரணடைந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த மந்திரவாதி ஷேக்பரீத்(35) கள்ளக் காதல் பிரச்சனையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பந்தமான முக்கிய குற்றவாளிகள் இருவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டனர்.
கொலையில் தொடர்புடையவர்கள் வரிசையாக சரணடைந்து வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன் எழும்பூர் கோர்ட்டில் பாஸ்கர், மாரி, ராஜா முகமது, மாரியப்பன் ஆகியோர் மாலையில் சரணடைந்தனர்.
சரணடைந்த இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆர்.கே.நகர் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மந்திரவாதியின் கள்ளக் காதலி ஷர்மிளா, முக்கிய கொலையாளியான தனது அண்ணன் இக்பால் இருக்கும் இடத்தை போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து அவரை போலீஸார் கைது செய்து ரகசியமாக வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
வாக்குமூலம் பெற்ற பின் இக்பால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் முக்கிய குற்றவாளியான சகாயம் என்ற சகாயராஜ் வக்கீல்கள் படை சூழ வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சகாயராஜ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 9 வருடம் சிறை தண்டனை பெற்றவராம்.
இந்த கொலை வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற மெக்கானிக் முருகன், நைனார் முகம்மதுவின் (ஷர்மிளாவின் கணவர்) அண்ணன் ரகமத்துல்லா ஆகியோரை பிடிக்க மத்திய அரசின் உதவி நாடப்பட்டுள்ளது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications