வெளியேறினாரா சமயபுரம் அம்மன்?பக்தர்கள் பீதி-ஆத்தூரில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சமயபுரம் மாரியம்மன் கோவிலிலிருந்து மாரியம்மன் வெளியேறி விட்டதாக கிளம்பிய வதந்தியால் மக்கள் பீதியடைந்தனர். அம்மனின் கோபத்தை தணிக்க வீடுகள் முன்பு வேப்பிலை கட்டி வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீர் பரபரப்பு கிளம்பியது. அம்மனுக்குக் கோபம் வந்து கோவிலை விட்டு வெளியேறி விட்டார் என்பதுதான் வதந்தி.
இதையடுத்து ஆத்தூர் மக்கள் பீதியடைந்தனர். ஆத்தா கோபம் மக்களுக்கு ஆகாது, எனவே மாரியம்மனை சமாதானப்படுத்த வீடுகள் முன்பு வேப்பிலை கட்டி வணங்கினர். மேலும் பல்வேறு நேர்த்திக் கடன்களையும் செய்து கொண்டனர்.
மாரியம்மன் கோவிலை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை அந்த ஊர் மக்கள் படபடப்புடனும், பரபரப்புடனும் பேசிக் கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications