ஓ.பி தம்பியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
பெரியகுளம்:முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று பத்து நிமிடங்கள் விசாரணை நடத்தினர். ஆனால், சோதனை எதையும் மேற்கொள்ளாமல் திரும்பி விட்டனர்.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜாவின் வீடு பெரியகுளத்தில் உள்ளது.
மூன்றாந்தல் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் 6 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று ராஜாவின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி குலோத்துங்க சோழன் தலைமையில் ேபாலீஸார் வந்தனர்.
ராஜாவிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பத்தே நிமிடங்களில் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை.
எதற்காக இந்த விசாரணை என்று செய்தியாளர்கள் டிஎஸ்பியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார். ராஜா தரப்பிலும் விளக்கம் தரப்படவில்லை.
முன்னதாக ராஜாவின் வீட்டிலும் மாஜி மந்திரிகள் அனிதா ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுச்சாமி, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் சொந்த ஊர்களில் உள்ள வீடுகளிலும் சென்னையில் உள்ள வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை அந்த போலீசார் மறுத்தனர்.
பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் டீக் கடை வைத்திருந்தபோது மிகச் சாதாரண ஆளாக இருந்தவர் இந்த ராஜா.
ஆனால், அதிமுக ஆட்சியில் மளமளவென பெரும் பணக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications