வழி மாறிச் சென்ற 4 தமிழக ஆடுகள் யார்?
சென்னை:குடியசுத் தலைவர் தேர்தலில் அதிமுக, மதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் பிரதீபா பாட்டீலுக்கு வாக்களித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஷெகாவத்தை தோற்கடித்து நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகும் பெருமையைப் பெற்றுள்ளார் பிரதீபா பாட்டீல்.
அவருக்கு ஓரிரு மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக 171 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இது திமுக கூட்டணிக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 ஓட்டுக்கள் உள்ளன. இதில் திமுக கூட்டணிக்கு 167 ஓட்டுக்கள் உள்ளன. அதிமுக மற்றும் மதிமுகவுக்கு 66 ஓட்டுக்கள் உள்ளன. ஒரு ஓட்டு தேமுதிகவின் விஜயகாந்த்துடையது.
திமுக கூட்டணியில் உள்ள 167 ஓட்டுக்கள் அப்படியே விழுந்துள்ளன. ஆனால் கூடுதலாக 4 ஓட்டுக்களும் பிரதீபாவுக்குக் கிடைத்துள்ளது. அதிமுக, மதிமுக கூட்டணியில் 63 பேர் ஓட்டளித்துள்ளனர். ஜெயலலிதா மற்றும் மதிமுக உறுப்பினர்கள் 2 பேர் ஆகிய 3 பேர் மட்டும் வாக்களிக்கவில்லை. விஜயகாந்த் ஓட்டுப் போட்டுள்ளார்.
பிரதீபாவுக்கு தற்போது கிடைத்துள்ள நான்கு கூடுதல் ஓட்டுக்களும் அதிமுக, மதிமுகவிலிருந்துதான் வந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
யார் அந்த நான்கு கருப்பு ஆடுகள் என்ற கேள்வி படு வேகமாக அதிமுக முகாமில் பரவியுள்ளது. இதற்குப் பேசாமல் ஓட்டுப் போடப் போகாமலாவது இருந்திருக்கலாம் என்றும் அதிமுகவினர் முனுமுனுத்துக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications