பிரதீபா பதவியேற்பு - ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள பிரதீபா பாட்டீல் வருகிற புதன்கிழமை டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 13வது குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

Prathiba Patil

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பெண் குடியரசுத் தலைராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் வரலாறு படைத்துள்ள பிரதீபா பாட்டீல், குடியரசுத் தலைவராக பதவியேற்பதற்கான விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வருகிற புதன்கிழமை பாரம்பரிய முறைப்படி குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பிரதீபா பாட்டீல் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்துச் செல்வர்.

அங்கு பிரதீபா பாட்டீலுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.

அதையடுத்து குடியரசுத் தலைவர் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதீபா பாட்டீல்.

அதன் பின்னர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு முறைப்படியான வழியனுப்பு விழா நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+