மும்பை குண்டுவெடிப்பு: இன்று மேலும் ஒருவருக்கு தூக்கு
மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று மேலும் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது 2வது கட்டமாக தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 10 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
ஏர் இந்தியா அலுவலக கட்டடம், சேனா பவன் (சிவசேனா கட்சி தலைமையகம்) ஆகிய இடங்களில் குண்டு வைத்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த பரூக் பவாலே என்பவருக்கு இன்று மும்பை தடா நீதிமன்ற நீதிபதி பி.டி.கோடே தூக்குத் தண்டனை அறிவித்தார்.
இந்த இரு இடங்களிலும் டைம் பாம் வகை குண்டுகளை வாகனங்களில் வைத்து வெடிக்கச் செய்தார் பவாலே என்பது அரசுத் தரப்பு குற்றச்சாட்டு. சிவசேனா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். ஏர் இந்தியா கட்டடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.
நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் மாஹிம், மீனவர் காலனியில் கையெறி குண்டுகளை வீசி 3 பேரைக் கொன்ற வழக்கில், ஜாகிர் உசேன், அப்துல் அக்தர் கான், பிரோஸ் அமாணி மாலிக், மொயின் பரிதுல்லா குரேஷி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதுதவிர அல் ஹுசேனி கட்டடத்தில் மோட்டார் பைக்கில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகளை வைத்ததாகவும் இவர்கள் மீது புகார் இருந்தது. நேற்று ஜாகிர் உசேன், அக்தர் கான், பிரோஸ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். குரேஷி மிகவும் இள வயதில் இருப்பதால் அவருக்கு தூக்குத் தண்டனைக்குப் பதில் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ. 1லட்சம் அபராதமும், குரேஷிக்கு ரூ. 1.65 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 100 பேரில் இதுவரை 92 பேருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது.
நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 8 பேருக்கு மட்டும் இன்னும் தண்டனை அறிவிக்கப்படாமல் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications