வேன்- பஸ் மோதலில் 2 பெண்கள் பலி
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே நடந்த கோர விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.
திருத்தணியிலிருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அதேபோல சென்னையிலிருந்து திருத்தணிக்கு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும்புதூர் என்ற இடத்தில் இரு வாகனங்களும் வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு வளைவில் பேருந்து படு வேகமாக திரும்பியுள்ளது. அந்த சமயத்தில் வேன் எதிர் திசையில் வந்துள்ளது.
வேன் வந்ததைப் பேருந்தின் டிரைவர் பார்க்காததால், வேன் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தின் மீதும் பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த சாந்தா பாய் (61), ஸ்ருதி (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
படுகாயமடைந்த 10 பேர் சென்னை அரசு மருத்துவமனையிலும், 24 பேர் உள்ளூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications