For Daily Alerts
Just In
இலங்கையில் மாணவர்கள்-போலீசார் மோதல்!
கொழும்பு:இலங்கை அரசு பல்கலைக் கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து கொழும்பு நகரில் மாணவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு நகரில் உள்ள ராஜரத்தை பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் நேற்று அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், பல்கலைக்கழகத்துக்கு அடிப்படை வசதிகள், விடுதி வசதிகள் செய்து தரக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த மோதலால் கொழும்பு நகரில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இலங்கையில் பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பெருமளவு குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
இலங்கை போக்குவரத்து மாணவர்கள் ஊழல் நடவடிக்கை போலீஸ் பாதிப்பு போராட்டம் scam கொழும்பு அரசியல்வாதிகள் politicians
Story first published: Thursday, May 31, 2007, 5:30 [IST]