மிசா கைதிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
சென்னை:மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கப்படுவது போல மிசா கைதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு மிசா கைதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான இடும்பையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் நாட்டில் அவசர நிலை சட்டம் (மிசா) பிரகடணப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் இந்திரா காந்திக்கு எதிராக செயல்பட்ட அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்கள்.
மிசா சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டவர்கள் மிகுந்த இன்னல்களுக்குப் பிறகே விடுவிக்கப்பட்டனர். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முரசொலி மாறன் ஆகியோரும் கூட மிசா கைதியாக சிறையில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரும், மிசா கைதியுமான ஆர். இடும்பையன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மொழிப் போர் தியாகிகளுக்கு வழங்குவது போல மிசா கைதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், மொழிப் போர் தியாகிகளுக்கு தற்போது மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, மிசா கைதிகளுக்கும் வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 3000 பேர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருச்சி மத்திய சிறையில், 114 பேர் அடைக்கப்பட்டனர். அவர்களில் 45 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்.
மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவர்கள், கடந்த 41 ஆண்டுளாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தினசரி குடும்பத் தேவைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களது நிலை குறித்து முதல்வர் கருணாநிதிக்கும், மூத்த அமைச்சர்களுக்கும் பலமுறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை எங்களது துயரம் தீரவில்லை.
உ.பி. மாநிலத்தில், மிசா கைதிகளுக்கு மாதம் ரூ. 1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல தமிழகத்திலும் மிசா கைதிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இடும்பையன்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications